வற்றாப்பளையில் 3 தினங்கள் தரித்திருந்த யாழ்- கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் இன்று மீண்டும் ஆரம்பம்.

 

 
 
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த யாழ்- கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் கடந்த மூன்று தினங்கள் வற்றாப்பளையில் தங்கியிருந்தனர்.
 
கடந்த 04 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பித்த இப் பாதயாத்திரை 09 ஆவது நாள் இன்று (14) , செவ்வாய்க்கிழமை ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயத்தை அடைந்து, தங்கும்.
 
 
 
கடந்த மூன்று நாட்களாக வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில்,  வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு வரை தங்கியிருந்தனர்.
 
இன்று,14ஆம் திகதி மீண்டும் பாதயாத்திரை ஊற்றங்கரை நோக்கி நகரும் என பாதயாத்திரை பொறுப்பாளர்களான எஸ்.ஜெயராஜா எஸ்.நந்தபாலா ஆகியோர் முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் இருந்து தெரிவித்தனர்.
 
“என்னதான் பொருளாதார நெருக்கடி இருந்தாலும் வழிநெடுகிலும் முருகன் அருளால் ஆலயங்களும் மக்களும் தாராளமாக உணவளித்து உதவி செய்தனர் . எவ்வித விக்கினமும் இல்லாமல் சந்தோஷமாக பாதயாத்திரையில் வருகிறோம்.” என இவர்கள் மேலும் தெரிவித்தனர்

Related posts