வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு நாவலடியில் சம்பவம்

வாழச்சேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நாவலடி பிரதான வீதியில் சிறியரக வாகனத்தின் பின்புற ஆசனத்தில் இருந்து வந்தவர் தவறுதலா வீதியில் விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான உஷானார் முகம்மது சியாம் (36) என்பவரே உயிரிழந்தவராவார்.
 
குறித்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பர்களுடன் வவுனியா பிரதேசத்திலிருந்து விற்பனைக்காக பலாப்பழங்களை கொள்வனவு செய்து கொண்டு  தனது வீடு திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் சிறிய ரக வாகனத்தின் பின்புற ஆசனத்தில் இருந்து வந்தவர் திடீரென வீதியில் விழுந்திருந்த நிலையில் வாழசை;சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டு போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
வாழைச்சேனை நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்;.நசீர்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts