வாழைச்சேனை கடதாசி கூட்டுத்தாபன தலைவராக நியமனம் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி

வாழைச்சேனை கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனத்தினை வழங்குவதற்கான அனுமதியினை கௌரவ ஜனாதிபதி  மைத்திரிபால சிறிநேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளனர்.இந்த உத்தியோகபூர்வ நியமனக்கடிதத்தினை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர மற்றும்  கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதிஉத்தீன் ஆகியோர் வழங்கிவைத்துள்ளார்
இவர் ஒரு ஆங்கில ஆசிரியராக கல்விப்பணிப்பாளராக இருந்து  பிரதியமைச்சராக எவ்விதமான அரசியல் வேறுபாடுகள் இன்றி மக்களுக்கு சேவைபுரிந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

Related posts