விபத்தில் இளைஞர்ஒருவன் பலி

மட்டக்களப்பு பாசிக்குடா வீதி பேத்தாழையில்  நேற்றுமாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞன் ஒருவன் உயிாிழந்துள்ளதாக கல்குடா பொலிசாா் தொிவித்தனர்.


பிறைந்துறைச்சேனை வாழைச்சேனையைச் சோ்ந்த எம்.என்.முகம்மது நைறுாஸ் வயது (18) என்ற இளைஞனே இவ்வாறு உயிாிழந்துள்ளாா்.
குறித்த இளைஞன் வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து பாசிக்குடாவிற்கு மோட்டாா் சைக்கிளில் செல்லும்போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

எதிரே சென்ற சிறிய கென்ரா் ரக வாகனம் சடுதியாக வீதியை விட்டு மறு பக்கம் செல்ல முற்படுகையில் பின்னால் சென்றவா் தமது வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளாா். இதனால் கென்ரா் வாகனத்திற்க எவ்வித சேதமும் ஏற்படவில்லை. கல்குடா பொலிசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மெற்கொண்டதுடன் சந்தேகத்தின் போில் கென்ரா் சாரதியை கைது செய்துள்ளதுடள் கென்ரரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பாிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிசாா் மேலும் தொிவித்தனர்.

Related posts