விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணம்-வாழைச்சேனையிவ் சம்பவம்

வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தின் போது படுகாயமடைந்தந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று (13) உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 8ம் திகதி தனது வீட்டிலிருந்து வாழைச்சேனை பிரதான வீதியினை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட போது அதே வீதியில் எதிர்திசையில் வந்த கார் மோதியதில் தலத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (13) அன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
கொண்டையங்கேணி வாழைச்சேனை பிரதேசத்தைச்சேர்ந்த வினாயகமூர்த்தி ரவேந்திரன் (29) என்பவரே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
 
வாழைச்சேனை நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்;.நசீர்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts