விபத்தில் சிக்கிய வயோதிபர் சிகிச்சை பலனின்றி பலி-உடலமும் இனங்காணப்பட்டது

 
(மண்டூர் மேலதிக நிருபர்)
 
ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்; பொலிஸார் தெரிவித்துள்ளனர்.75 வயதுடைய கந்தக்குட்டி-சீனித்தம்பி என்பவரே உயிரிழந்தவராவார்.
 
கடந்த மாதம் குறித்த நபர் ஏறாவூர் பிரதான வீதியை கடக்கமுற்பட்டபோது வீதியில் பயணித்துக்கொண்டிருந்த சிறியரக வாகனம் மோதியதில் படுகாயமடைந்த குறித்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும். உறவினர்கள் எவரும் முன்வந்து பிரேதத்தை அடையாளம் காட்டாத நிலையில் பிரேதம் மட்டக்களப்:பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.பின்னர் நேற்று (5) திகதி உறவினர்கள் முன்வந்து பிரேதத்தை அடையாளம் காட்டிய பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் பிரேதம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்;.நசீர்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை ஏறாவூர்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts