விபத்தில் சிக்கிய வாயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காத்தாங்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய ஜே.பி.வீதி,புதுக்குடியிருப்பைச்சேர்ந்த மாணிக்கப்போடி-வல்லிபுரம்(68) சிகிச்சை பலனின்றி நேற்று(7) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 29ம் திகதி தனது  வயலினை பார்ப்பதற்காக கச்சேனை பிரதேசத்திற்கு தனது துவிச்சக்கர வண்டியில சென்று அங்கிருந்து ஐந்து நாட்களுக்கு பின்னர் தனது வீடு திரும்பி வரும் போது புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் பயணித்திருந்த மோட்டார் சைக்கிள் குறித் நபர் மீது மோதியதில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (7) உயிரிழந்துள்ளார்.விபத்தினை ஏற்படுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொலிஸ் பொறுப்பதிகாரி க.யோகானந்தன் அவர்களின் அறிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு-மணிமாறன் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.
 
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts