விவசாயியிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லின் அளவை அதிகரிக்கத் தீர்மானம்

விவசாயி ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லின் அளவை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயி ஒருவரிடமிருந்து இதுரை, 2000 கிலோ கிராம் நெல் மட்டுமே கொள்வனவு செய்யப்பட்ட நிலையில், அதனை 3000 கிலோகிராமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபை சிறுபோக நெல் அறுவடை கொள்வனவை தற்போது ஆரம்பித்துள்ளது.

சிறுபோக நெல் கொள்வனவிற்காக அரசாங்கம் 500 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ சம்பா நெல் 41 ரூபாவிற்கும் நாட்டரிசி நெல் ஒரு கிலோ 38 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts