வீட்டின் ஜன்னல் உடைத்து கொள்ளை மண்டூu;பிரதேசத்தில் சம்பவம்

வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலமுனை மண்டூர் பிரதேசத்தில்லுள்ள வீடுடொன்றினுள் கொள்ளையர்கள் புகுந்து பெறுமதிவாய்ந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் நேற்று முந்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது

சம்பவதினம் வீட்டுரிமையாளர்கள் ஆலயத்திற்கு சென்றிருந்த வேளையில் வீட்டின் ஜன்னல் பகுதியை உடைத்து உட்புகுந்து அங்கிருந்த நாற்பதாயிரம் ரூபா பணம் மற்றும் சமயலறையில் இருந்த பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளை இட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Related posts