வீதியில் அலைந்த 17பேரில் மூவருக்கு கொரோனா!

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக‌ பிரிவில் நேற்று வீதியில் திரிந்த மேற்கொண்ட 17 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகள் 03 நபர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 Pஊசு மாதிரிகளும் எடுக்கப்பட்டனஎன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.
 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன்

 வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர்  தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,நுளம்பு கள தடுப்பு பிரிவினர்,பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு அண்டிஜென் பரிசோதனையின் போதே இந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
 
எனவே மக்கள் வெளியில் அத்தியவசிய தேவை தவிர வர வேண்டாம் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி
டொக்டர் தஸ்லிமா வசீர்
மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts