வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை வலயம் சாதனை.

இவ்வருடம்  நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறைக் கல்விவலயத்தில் 210 மாணவர்கள் சித்திபெற்று சாதனை படைத்துள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தெரிவித்தார்.

வலயத்தில் உள்ள  சம்மாந்துறைக் கல்விக் கோட்டத்தில் 77 மாணவர்களும் இறக்காமக் கல்விக் கோட்டத்தில் 45 மாணவர்களும் நாவிதன்வெளிக் கல்விக் கோட்டத்தில் 32 மாணவர்களும் சித்தியடைந்துள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்

அதேவேளை வலயத்தின் வளர்ச்சியானது 2019 ஆம் ஆண்டினை விட அதிகரித்து இருப்பதுடன் இறக்காமக் கல்விக்கோட்டத்தில் கடந்த வருடத்தினை விட இரட்டிப்பான மாணவர்கள் சித்தியடைந்து இருப்பதாக தெரித்தார். சித்தியடைந்த மாணவர்களையும் இம்மாணவர்களை வழிப்படுத்திய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள், இவ் வெற்றியைப் பெறுவதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தெரிவித்தார்

Related posts