வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் சரஸ்வதி சிலை திறந்துவைப்பு


எஸ்.சபேசன்
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட சர்ஸ்வதி சிலை திறந்துவைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை 01 ஆம்திகதி பாடசாலையின் அதிபர் என். பிரபாகர் தலைமையில் இடம்பெற்றது.
சரஸ்வதி சிலையினை நிர்மாணிப்பதற்கு அப்பிரதேசத்தினைச் சேர்ந்த சமூகசேவகர் சமாதான நீதவான் இராஜகோபால் அவர்களது புதல்வர் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் அருண் அவர்களது சொந்த நிதியில் 8 அடி உயரமுடைய இச்சிலை அமைக்கப்பட்டது.
இவ் திறப்புவிழாவில் பிரதம அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்,அருண்அவர்களது பெற்றோர்களான இரஜகோபால் திருமதி அருந்ததி இராஜகோபால் கலைமகள் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் எஸ்.பாலசிங்கன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இவர்களது சேவையினைப் பாராட்டி நிகழ்வில் கௌரவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது

Related posts