வைத்தியருக்கு எதிராக இன்றும் 16 முறைப்பாடுகள்

கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று (27) 16 தாய்மார்  முறைபாடு செய்ததாக, குருநாகல் போதனா வைத்தியசாலையின் நிறைவேற்றதிகாரி  தெரிவித்துள்ளது.

இதற்கமைய குருநாகல், வாரியபொல, கலேவல, தம்புளை, மாவத்தகம, மெல்சிறிபுர ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே முறைபாடு செய்துள்ளனர்.

இதேவேளை நேற்று வாரியபொல, குருநாகல் ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு தாய்மார் குறித்த வைத்தியருக்கு எதிராக முறைபாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts