ஸஹாரானின் தம்பியுடன் ஆயுத கொள்வனவில் ஈடுபட் ஒருவர் காத்தான்குடியில் கைது

ஜ எஸ். ஜ. ஏஸ். தீவிரவாத அமைப்பின் ஸஹாரானின் நெருங்கியவரும் அவரின் தம்பியுடன் கொழும்பு மாத்தறை பகுதிகளில் துப்பாக்கி கொள்வனவு செய்ய சென்ற 38 வயதுடைய காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரை இன்று (30) செவ்வாய்கிழமை காத்தான்குடியில் வைத்து  மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வவுணதீவு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி மாரசிங்க தலைமையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான  புலனாய்வு பிரிவினர்.
சம்பவதினமான இன்று (30) காலை காத்தான்குடி 2ம் பிரிவு ரெலிகோம் வீதி ஏ.எச்.எம். பௌசி மாவத்தையிலுள்ள 38 வயதுடைய அப்துல் கபூர் முகமது றிஸ்வின் என்பவரை கைது செய்தனர்
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்  ஜ எஸ். ஜ. ஏஸ். தீவிரவாத அமைப்பின் ஸஹாரானின் தம்பியாருடன் மாத்தறை கொழும்பிற்கு சென்று ஆயுதங்கள் கொள்வனவு செய்துள்ளதாக அதிரடிப்படையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து அவரின்  வீட்டை விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது அங்கிருந்து ஒரு கைக்கோடரி கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர் 

Related posts