ஸ்ரீலங்காவில் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு

ஸ்ரீலங்காவில் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு, களுத்துறை கம்பஹா கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு ஏப்ரல் 16ஆம் திகதி காலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது.

அத்துடன் அன்றைய தினம் மாலை 4 மணி முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு, களுத்துறை கம்பஹா கண்டி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts