‘ஹம்பாந்தோட்டையே ஜப்பானியர்களுக்கான உரிய இடம்

ஜப்பான் நாட்டின் வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான உரிய பிரதேசம் ஹம்பாந்தோட்டை பிரதேசமே என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் கியோடா ஊடக நிறுவனத்துடனான நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசின் சொத்துக்களை விற்பனை செய்யத் தேவையில்லை என்றும், நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யலாம் என்றும் தெரிவித்துள்ள மஹிந்த, தேசிய வளங்களை விற்பது தமது கொள்கை இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

Related posts