ஹோலிக்குரோஸ் மாணவனுக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர் வீட்டுக்குச் சென்று பாராட்டு .

(சா.நடனசபேசன்,முஜாஹித்)

வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வலயமட்டத்தில் அதிகூடிய புள்ளியான 191 புள்ளிகளைப் பெற்ற சம்மாந்துறைக் கல்விவலயத்தின் சொறிக்கல்முனை ஹோலிக்குரோஸ் மகாவித்தியாலய மாணவன் ஜொனிப்பிரபாகரன் ஷான்ஜொகிர்தன்  அவர்களை சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம். எஸ் .எஸ்.நஜீம் மற்றும் நாவிதன்வெளிப் பிரதேசசெயலாளர் எஸ்.ரங்கநாதன் ஆகியேர்கள் நேரடியாக வீட்டுக்குச் சென்று பாராட்டி நினைவுப் பொதிகளையும் பணப்பரிசில்களையும் இன்று புதன்கிழமை வழங்கிவைத்தனர். 

அத்தோடு இம் மாணவனுக்கு கற்பித்த ஆசிரியர் எஸ்.லோகேஸ்வரன் மற்றும் பாடசாலை அதிபர் அருட்சகோதரி சிறியபுஷ்பம் ஆகியோரையும் பாராட்டி நினைவுப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதிக் கல்விப்பணிப்பாளரும் நாவிதன்வெளிப் பதில் கோட்டக் கல்விப்பணிப்பாளருமான செல்வி வி.நிதர்சினி ஆசிரிய ஆலோசகர் கே.அற்புதராசா மற்றும் அதிபர் பிரதீஸ்வரன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts