(09) நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்.

(09) நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை நெடுஞ்சாலையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மைலம்பாவெளியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று (09) நண்பகல் 12.00 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அதே திசையால் வந்த துவிச்சக்கரவண்டியுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன சேதமடைந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர்கள் பொலிசாரின் உதவியுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts