களுவாஞ்சிகுடி அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு

களுவாஞ்சிகுடி அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி திருச்சடங்கு எதிர்வரும் 21 ஆம் திகதிதிருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 29 ஆம் திகதி நடைபெறும் திருக்குளிர்தி நிகழ்வுடன் நிறைவடையவுள்ளதாக ஆலய பொதுச்செயலாளர் க.சத்தியமோகன் தெரிவித்தார்.
ஆலயபிரதமகுரு சிவத்திரு க.தரிஷ்சனன் குருக்கள் தலைமையில் தொடர்ந்து ஒன்பது தினங்கள் நடைபெறவுள்ளது.
இதில் 26ஆம் திகதி சனிக்கிழமை பகல் கன்னிக்கால் வெட்டுச்சடங்கும், இரவு தாலிகட்டும் பூசையும் இடம்பெறவுள்ளது. 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மனின் திருக்குளிர்த்தி நடைபெற்று கதவுபூட்டுதல் இடம்பெறும். அன்றிரவு வைரவர் பூசையும் எதிர்வரும் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தெளிவு சடங்கு (எட்டாம் சடங்கு) நடைபெறும்
சடங்கு நாட்களில் ஆலயத்தில் அன்னதானம் மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts