130 கிலோகிராம் கேரளக்கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது

மன்னார் – ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் வைத்து 130 கிலோகிராம் நிறையுடைய கேரளக்கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

65 இலட்சம் ரூபா பெறுமதியுடைய குறித்த கேரளக்கஞ்சா 4 பொதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மன்னாரைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

Related posts