15 நாட்களேயான சிசுவை விற்க முனைந்த நால்வர் கைது !

15 நாட்களேயான சிசுவை ராகம வைத்தியசாலைக்கு அருகில், விற்பனை செய்வதற்கு முயற்சித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை, பாட்டி, மற்றும் தரகராக செயற்பட்ட பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ராகம மற்றும் மஸ்கெலியா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related posts