2018 ஆம் ஆண்டில் 311 யானைகள் பலி

2018 ஆண்டில் இலங்கையில் 311 யானைகள் உயிரிழந்துள்ள அதேவேளை, யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி 95 பேர் தமது உயிர்களை இழந்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

மனித செயற்பாடுகள் காரணமாகவும், விபத்துகள் காரணமாகவும் அதிகளவான யானைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தவகையில் 2018 ஆம் ஆணடில் ரயில் மோதுண்டு 15 யானைகள் உயிரிழந்துள்ளன. 2017 ஆம் ஆண்டில் 7 யானைகள் இவ்வாறு உயிரிழந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டில் மொத்தமாக 256 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, 87 மனித உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. அத்துடன் வெடிப்பொருட்களால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 87 ​ஆகவும், ரயிலில் மோதுண்டு 48 யானைகளும் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 1,737 காட்டு யானைகள் மேற்குறிப்பிட்டவாறு உயிழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts