முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் தொட்டியடிப்பகுதியில் வசித்துவரும் 16 வயதுடைய கேதீஸ்வரன் மதுசுதா என்ற மாணவி நேற்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவி அவரது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதையடுத்து அயலவர்கள் ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த மாணவியின் சடலத்தை மீட்டு ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts