மட்டக்களப்பு, விவேகானந்தபுரம் பகுதியில் யுவதியொருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

17 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு நேற்று (வியாழக்கிழமை) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், இதனைக் கண்ட தாயார் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருப்பதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts