28 நாட்களில் அதிகளவான கோவிட் மரணங்கள்

 இலங்கையி்ல் கடந்த 28 நாட்களில் அதிகளவான கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

குறித்த காலப்பகுதியில் கோவிட்-19 தொற்றினால் 4,100 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

ஒகஸ்ட் 27 அன்று மாத்திரம் 212 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கைகள் கூறுகின்றன.

இது கோவிட்-19 தொற்றால் இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகபடியான உயிரிழப்பு ஆகும். இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8583 ஆக அதிகரித்துள்ளது

Related posts