வெகு விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது மாற்றுத்திறனாளிகளுக்கான உதய ஒளி அமைப்பின் அலுவலகம் 


மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான உத்தியோகபூர்வ அலுவலகம் 31 சம்பரதாயபூர்வமாக பட்டிப்பளை கொக்கட்டிச்சோலை மனித நேய காப்பகத்திற்கு அருகாமையில் உதய ஒளி அமைப்பின் தலைவர் கே. பாக்கியராசா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
வைபவத்தின் சிறப்பு விருந்தினர்களாக பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் எஸ். புஸ்பலிங்கம் பிரதேச செயலகத்தின் சமூகசேவகர்கள் உத்தியோகத்தர் எம்.சுந்தர்ராஜன் பட்டிப்பளை பிரதேச சபையின் உறுப்பினர்கள் வீ.   கிரேஸ்குமார் எஸ்.லோகிதராஜா களுவாஞ்சிகுடி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் ரீ.வரதராஜன் மற்றும் மனித நேய காப்பகத்தின் தலைவர் கே.குபேந்திரன் ஆகியோர் உட்பட மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அந்தவகையில் நிகழ்வானது உதய ஒளி அமைப்பின் பெயர்ப்பலகை திரையாக்கம் செய்யப்பட்டு அலுவலகத்தின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் மாற்றுத்திறனாளிகளது செயற்பாடுகளுக்காக சுயதொழில்களுக்குரிய உபகரணங்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Related posts