மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பின்புறம் உள்ள பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்மட்டக்களப்பு நகரின் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள கட்டடத்தில் நகைத் தொழில் செய்துவரும் நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு – கொக்குவில் பகுதியை சேர்ந்த க.அருட்செல்வம் (44 வயது) என தெரியவருகிறது.இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts