9 மி.மீ துப்பாக்கிகளுக்கான அனுமதி இரத்து

தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 9 மில்லிமீற்றர் துப்பாக்கிகளுக்கான அனுமதியை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை மறுதினத்திலிருந்து புதிதாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த 9 மி.மீ துப்பாக்கிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு பணத்துக்காக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதால், அவற்றிட்கான அனுமதியை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்ததாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்​டோ தெரிவித்துள்ளார்.

Related posts