இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் விளையாட்டு உபகரணங்கள் ஒருதொகுதி வழங்கி வைக்கப்பட்டது.

போரதீவுப்பற்று  வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட  காக்காச்சிவட்டை இளங்குயில் விளையாட்டு கழகம்,மற்றும் பலாச்சோலை கருணை விளையாட்டு கழகங்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் விளையாட்டு உபகரணங்கள் ஒருதொகுதி புதன்கிழமை(19)மாலை விளையாட்டு மைதானத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.காக்காச்சிவட்டை இளங்குயில் விளையாட்டுக்கழகமும்,பலாச்சோலை கருணை விளையாட்டுக்கழகமும் இணைந்து இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின்தவிசாளர் இரா.சாணக்கியன் அவர்களிடம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அமைப்பின் தவிசாளரினால் இரண்டு விளையாட்டுக் கழக்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்க வழங்கி வைக்கப்பட்டது.இதன்போது விளையாட்டுக் கழகத்தின் தலைவர்,செயலாளர் ,விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உபகரணங்களைக் பெற்றுக் கொண்டார்கள்

Related posts