போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட காக்காச்சிவட்டை இளங்குயில் விளையாட்டு கழகம்,மற்றும் பலாச்சோலை கருணை விளையாட்டு கழகங்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் விளையாட்டு உபகரணங்கள் ஒருதொகுதி புதன்கிழமை(19)மாலை விளையாட்டு மைதானத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.காக்காச்சிவட்டை இளங்குயில் விளையாட்டுக்கழகமும்,பலாச்சோலை கருணை விளையாட்டுக்கழகமும் இணைந்து இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின்தவிசாளர் இரா.சாணக்கியன் அவர்களிடம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அமைப்பின் தவிசாளரினால் இரண்டு விளையாட்டுக் கழக்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்க வழங்கி வைக்கப்பட்டது.இதன்போது விளையாட்டுக் கழகத்தின் தலைவர்,செயலாளர் ,விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உபகரணங்களைக் பெற்றுக் கொண்டார்கள்
Related posts
-
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்... -
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்...