லிந்துலை நகர சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வருக்கு எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியல்

அக்கரப்பத்தனை போட்மோர் தோட்டப்பகுதியிலிருந்து தலவாக்கலை நகரிற்கு இரண்டு பிள்ளைகளுடன் கடந்த 04.06.2017 அன்று வருகை தந்த தாய் மற்றும் பிள்ளைகளை கூட்டிச் சென்று தாயை துஷ்பிரயோகம் செய்து பிள்ளைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தலவாக்கலை லிந்துலை நகரசபை தவிசாளர் மற்றும் குறித்த சபையின் உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட மேலும் இருவரை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சமோத் ஜெயசேகர இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸாரால் 03.06.2018 அன்று இரவு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை பொலிஸ் விசாரணையின் பின் 04.06.2018 அன்று 4.30 மணியளவில் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவர்களை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts