கொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு

களனிவௌி புகையிரத பாதையூடாக பயணித்த புகையிரதம் கொட்டாவ – மாலபல்ல புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக களனிவௌி புகையிரத வீதியால் பயணிக்கும் அனைத்து புகையிரத சேவைகளும் தடைபட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Related posts