சீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, அனர்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பல பிரதேசங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள நிலையில் 68 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்க நிதியமைச்சு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts