கல்முனை வைத்தியசாலையில் தீ

கல்முனை பகுதியிலுள்ள அஸ்ரப் வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் 22 (செவ்வாய்க்கிழமை) முற்பகல் தீ ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த தீயை கல்முனை மாநகரசபை தீயணைப்புப்பிரிவு மற்றும் வைத்தியசாலையின் சுகாதார தொழிலாளர்கள் இணைந்து விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் பாரிய பொருள் சேதம் தவிர்க்கப்பட்டதுடன் உயிராபத்த ஏதும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் ஆய்வு கூடத்தில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts