அடக்குமுறைக்கு ஜனாசாவிவகாரம் சிறந்ததொரு பாடம்!.மூத்த முஸ்லிம் அரசியல் பிரமுகர் ஹசன்அலி கூறுகிறார்.

ஜனாசா விவகாரம் சிங்கள அடக்குமுறைக்கு இது ஒரு சிறந்த பாடமாக இருக்கவேண்டும். கரண்டியால் எடுக்கவேண்டியதை சம்மட்டிகொண்டுஎடுத்ததாக இதனைப் பார்க்கிறேன்  என்று மூத்த முஸ்லிம் அரசியல் பிரமுகரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
 
ஜனாசா நல்லடக்கம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளதே இதுதொடர்பாக என்ன சொல்கிறீர்கள் என கேட்டபோது அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
 
அவர் மேலும் கூறுகையில்:
ஜனாசா அடக்கம் தொடர்பாக அரசாங்கம் காலந்தாழ்த்தியாவது சாதகமான முடிவைத்தந்துள்ளது. மகிழ்ச்சி. இதற்காக பின்புலத்தில் நின்றுழைத்து சர்வதேசத்திற்கு எட்டச்செய்த  சகலருக்கும் அமைப்புகளுக்கும் எமது கட்சிசார்பில் நன்றிகள்.
உலக இஸ்லாமியபேரவை(OIC) பொத்துவில்-பொலிகண்டி (P2P)பேரணி எல்லாம் இந்தமுடிவுக்கு அணிசேர்த்தன எனலாம்.பாராளுமன்றில் காத்திரமான குரலெழுப்பிய தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்றிகள்.

Related posts