அம்பாறையின் சில பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கடும் காற்று

அம்பாறையின் சில பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கடும் காற்று காரணமாக சுமார் 76 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை மற்றும் நவகம்புர உள்ளிட்ட பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 76 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts