தேசியரீதியில் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை புரிந்த மாணவி

அகில இலங்கை தமிழ் மொழித்தின தேசியப் போட்டியில் பாவோதல் பிரிவு -04 இல் பங்குபற்றிய கார்மேல் பற்றிமா தேசியபாடசாலை மாணவி சிறிதரன் சியாமசங்கவி தேசியரீதியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தினை தனதாக்கி கொண்டதுடன் பாடசாலைக்கும் கல்முனை கல்வி வலயத்திற்கும் பெருமைதேடிக் கொடுத்துள்ளார்.

இவர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியபாடசாலையில் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்கின்றார். பெரியநீலாவணைக் கிராமத்தைச்சேர்ந்த இம் மாணவியின் தந்தை ஒரு விவசாயி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts