அரசியல் கட்சிகளின் பாவங்களை பொதுமக்கள் மீது சுமத்த வேண்டாம்

அரசியல் கட்சிகளின் பாவங்கள் பொதுமக்களின் மீது சுமத்தப்படாமல் நிலையான நாட்டுக்காக உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்   இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்​கொண்டப்  போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

நாட்டின் அரசியல் சிக்கல் நிலைக் காரணமாக, பொருளாதாரம், அரசியல் மற்றும் ஒற்றுமை சீரழிந்துள்ளதால் உடனடியாகப் பொதுத் தேர்தலை நடத்தி இந்தப் பி​ரச்சினைகளுக்கு தீர்வைப் ​பெற வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலொன்று அவசியம் என்ற குரல்கள் தற்போது நாட்டில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளதாகவும் நாட்டை நிலையான நாடாக முன்னேற்றவே பொதுத் தேர்தல் அவசியமாகியுள்ளதாகவும் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts