பாடசாலை மாணவர்கள் இருவர் பலி

பாடசாலை மாணவர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியதில், 17 வயதுடைய மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் வைத்து இடம்பெற்ற வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறிய நிலையிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவன், பேருவளை – மரக்கலாவத்தை பிரதேசத்தைச் ​சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் வைத்து இடம்பெற்ற இச்சம்பவத்தால், பேருவளை வைத்தியசாலையில் குறித்த மாணவன் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும், சிகிச்சை பலனின்றி  மாணவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில், குறித்த மாணவனை தாக்கி காயமேற்படுத்திய 15 வயதுடைய மற்றைய மாணவனை பேருவளை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு,  மாத்தறை – எலவெல்ல வீதியில் பிரத்தியேக வகுப்பொன்றுக்கு அருகில் இடம்பெற்ற மாணவர்களின் தாக்குதல் சம்பவத்தில், கத்தி குத்துக்கு இலக்கான நிலையில், 19 வயதுடைய மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் 4 குழுவாக இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts