அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரதம் போராட்டம்

அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று  06 ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு அருகாமையில்       தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது விடுதலை செய்யாவிடின் போராட்டம் தொடரும் அப்பாவிகளை சிறையில் போட்டு வதைக்காதே அரசியல் கைதிகளை விடுதலை செய் அல்லது புனர்வாழ்வுக்கு அனுப்பு சர்வதேசமே கைதிகளின் விடுதலைக்கு அழுத்தம் கொடு கைதிகளின் பிள்ளைகளை அநாதரவாக்காதே என பல விடயங்கள் அடங்கிய சுலோகங்கள் பதாதைகளாக வடிவமைக்கப்பட்டு ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts