அகத்தியர் வித்தியாலயத்தில் முதல்முறையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் ஒரு மாணவி சித்தி

சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட அதிகஷ்ட பாடசாலையான நாவிதன்வெளி, சென்ரல் கேம்-5  கமு/சது அகத்தியர் வித்தியாலயத்தில் முதல்முறையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவி ஒருவர் சித்தியடைந்துள்ளார்.
 
மத்தியமுகாம்-6 இனை சேர்ந்த சுதாகர் சபஸ்சிகா என்ற மாணவியே 172 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் சா. சிதம்பரபிள்ளை தெரிவித்தார்.
 
இப் பாடசாலையானது 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், கடந்த 6 வருடங்களில் இவ்வருடமே முதல்முறையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் குறித்த மாணவி சித்தியெய்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts