அறநெறிப்பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை பூட்டுஇந்துகலாசார திணைக்களப்பணிப்பாளர் உமாமகேஸ்வரன்

கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து அறநெறிப் பாடசாலை நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரன் இதனை  அறிவித்துள்ளார்.
 

கொரொனா வைரஸ் தொற்றுத் தாக்கத்தின் மீளெழுச்சி இலங்கையின் பல மாவட்டங்களில் அதிகரித்துக் காணப்படுவதால் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கற்றல் சார் நடவடிக்கைகளை மறு அறிவித்தல் வரும்வரை மேற்கொள்ள வேண்டாமென இந்து சமய அறநெறிப் பாடசாலைச் சமூகத்தினரிற்கு  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்  அறிவுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி  (2) ஞாயிற்றுக்கிழமை நாட்டில எந்தவொரு அறநெறிப்படசாலையும் நடக்கவில்லை.

Related posts