ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி.

ஆசிரியர்களை அரசியல் .அதிகாரத்தினைக் கொண்டு அடக்க முயல்வதற்கு எதிராகவும், ஆசிரியர்களைக் கொச்சைப்படுத்திய காடையர்களை சட்டத்தின்முன் நிறுத்தக்கோரியும் மாபெரும் சுகவீனப்போராட்டமும், கண்டனப்பேரணியும் இன்று 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 1.50 மட்டக்களப்பு சிவானந்தா தேசியபாடசாலை முன்பாக இடம்பெற்றதுஇந்தப் பேரணியின் போது ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து,ஆசிரியர்களை அரசியல் அதிகாரத்தால் அடிமைப்படுத்தாதே, கல்வியை அரசியல் மயமாக்காதே, மாணவர்களது கல்வியை அழிக்காதே போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோபங்களை ஏந்திக்கொண்டு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டப்பேரணியில் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு இலங்கை ஆசிரியர்  சங்கத்தின் பிரதித் தலைவர் சமீம் மட்டக்களப்புமாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் உட்பட ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் . 

Related posts