ஆயித்தியமலை பாதயாத்திரையின் போது தாகசாந்தி ஏற்பாடு

ஆயித்தியமலை புனித சகாயமாதா திருத்தலத்தின் வருடாந்த உற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அவ்உற்சவத்தின் 09ம் நாளான இன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து வவுணதீவு வழியாக பாதயாத்திரை இடம்பெற்றது.
 
இப் பாதயாத்திரையில் கலந்து கொள்ளும் பக்தர்களின் தாகம் தீர்க்கும் முகமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் வழிகாட்டலில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணி என்பவற்றின் ஏற்பாட்டில் வவுணதீவு ஆயித்தியமலை பிரதான வீதியில் தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் சிற்றுண்டிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
 
இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் இணைப்பாளர் தினேஸ் உட்பட இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள், வாலிபர் முன்னணியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts