சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை  மாலை சிறுமி ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
 
 
குகனேசபுரம் ஆலம்குளத்தினை சேர்ந்த ச.விஜயரூபினி வயது 12 எனும் ஆறாம் ஆண்டில் கல்வி பயிலும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தமது சகோதரியுடன் அருகில் உள்ள குளக்கட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது கால் தவறி குளத்தில் உள்ள மடுவில் வீழ்ந்துள்ளார். பின்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துசென்று அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
குறித்த சம்பவம் பிரதேசவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுமியின் தாயார் கணவனினால் கைவிடப்பட்ட நிலையில் தமது 3 பெண் பிள்ளைகளையும் ஆடு மேய்க்கும் கூலித் தொழில் செய்து தமது வாழ்வாதாரத்தினை மேற்கொண்டு வருகிறார். தற்போது சிறுமியின் உடலை நல்லடக்கம் செய்வதில் பொருளாதார சிக்கல் நிலையினை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts