ஆயிரத்தை அண்மிக்கும் கிழக்கின் கொரோனாதொற்றுக்கள்!கிழக்கில் 947: அக்கரைப்பற்றில் 644 ,கல்முனையில் 157 ,மட்டுவில்112 ,திருமலையில் 104.

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்துள்ளது. அங்கு நேற்றுவரை 947 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
 
திருமலையில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்தே கிழக்கின் நிலைமை இவ்விதம் அதிகரித்துள்ளது.
 
கிழக்கில் கடந்த 24மணித்தியாலங்களில் 32பேர் தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கூடிய 08 பேர் பொத்துவிலிலும் அடுத்ததாக திருமலையில் 05பேரும் இனங்காணப்பட்டிருந்தனர்.
இதுவரை சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது மற்றும் அட்டாளைச்சேனையில் 4 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
 
திருமலையில்…
திருமலை மாவட்டத்தில் நீண்டகாலமாக இரட்டை இலக்கங்களுள் இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று திடீரென 3இலக்கங்களாகஅதாவது 104ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமi நகரில் 57பேரும் மூதூரில் 25பேரும் கிண்ணியாவில் 8பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.
 
கல்முனை மாநகரில்..
அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 157 தொற்றுக்களாக  அதிகரித்திருக்கிறது. கல்முனை தெற்கி;ல் 113பேரும் சாய்ந்தமருதில் 32பேரும் கல்முனை வடக்கில் 12பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணமும் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனைக்குடியை மையமாகக் கொண்ட கல்முனை தெற்கு சுகாதாரப்பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக 113 ஆக உயர்ந்துள்ளது. 
 
இதுவரை கிழக்கில் பேலியகொட கொத்தணி மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 112பேரும் கல்முனை பிராந்தியத்தில் 685பேரும் திருமலை மாவட்டத்தில் 104பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 23பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
 
தனிப் பிரிவுகள் ரீதியாக….
கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள் 23பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 685பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
அக்கரைப்பற்றுக் கொத்தணி மூலமாக இதுவரை 644பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
 
தனியாகப்பார்க்குமிடத்து  அக்கரைப்பற்றில் மட்டும் 3034பேரும் அடுத்ததாக கல்முனை தெற்கில் 113 பேரும் அட்டாளைச்சேனையில் 65பேரும் கோறளைப்பற்று மத்திபிரிவில்  தொற்றுக்கள் 61பேரும் பொத்துவிலில் 58பேரும் திருமலையில் 57பேரும்  இனங்காணப்பட்டிருந்தனர்.
 
அடுத்தபடியாக   சாய்ந்தமருதில் 32பேரும்  ஆலையடிவேம்பில் 27பேரும் இறக்காமத்தில் 23பேரும் மூதூரில் 25பேரும் திருக்கோவிலில் 14 பேரும் சம்மாந்துறையில் 14பேரும் கல்முனை வடக்கில் 12பேரும் களுவாஞ்சிகுடியில் தலா 11பேரும் நிந்தவுரில் 10பேரும் ஏறாவூரில் 10பேரும்  இனங்காணப்பட்டிருந்தனர்.
 
சிகிச்சை நிலையங்களில் 2208 அனுமதி
கிழக்கிலுள்ள 06 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 489கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 
நேற்று (25.12.2020) வெள்ளிக்கிழமை  வரை 2208பேர் மேற்படி 6 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 1708பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.11பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.இன்னும் 77கட்டில்கள் எஞ்சியுள்ளன.
 
காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 753பேர் அனுமதிக்கப்பட்டு 610பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 139பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர்.இன்னும் 19 கட்டில் தேவையாகவுள்ளன.
 
மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 80 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 72 பேரும் பதியத்தலாவ சிகிச்சை  நிலையத்தில்  28பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 86 பேரும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 84 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 
30387பேருக்கு பிசிஆர் பரிசோதனை!
 
இதுவரை கிழக்கில்     30387பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள் அக்கரைப்பற்று கொத்தணிப்பகுதியில் மட்டும் 15166 பிசிஆர் அன்ரிஜன்ற் சோதனை நடாத்தப்பட்டது.
கல்முனைப்பிராந்தியத்தில் 16985 சோதனைகளும் மட்டக்களப்பில் 7577 சோதனைகளும் அம்பாறையில் 2543 சோதனைகளும் திருகோணமலையில் 3282சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Related posts