ஆரையம்பதி ஆர்.கே.எம்.மகாவித்தியாலயத்தில் 17 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி.

மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள ஆர்.கே.எம் மகாவித்தியாலயத்தில் இவ்வருடம் 58 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி இருந்தார்கள் இவர்களில் 17 மாணவர்கள் 160 எனும் வெட்டுப்புள்ளியை கடந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றிருக்கிறார்கள் மொத்தமாக 53 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருப்பதோடு பரீட்சைக்கு தோற்றியவர்களில் 57 மாணவர்கள் 70க்கும் மேற்பட்ட புள்ளிகளை  பெற்றுள்ளார்கள்‌ என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவர்களில் சண்முகராசா சுவாதிகா 193 புள்ளிகளையும் சசிகுமார் கிறுணிக்ஷா188 புள்ளிகளையும் சதீஸ்வரன் இஷானி 187 புள்ளிகளையும் பெற்று முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளனர்.

Related posts