ஆலயதலைவரின் இறுதி யாத்திரை

வரலாற்றுப்பிரசித்திபெற்ற நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத் தலைவர் கோ.கமலநாதனின்(68)
இறுதி  யாத்திரைநேற்று வெள்ளிக்கிழமை காரைதீவில் நடைபெற்றது.
 
ஆலயவளர்ச்சியில் அரும்பாடுபட்டு உழைத்த தலைவர் கோ.கமலநாதனின் இறுதி  அஞ்சலி கூட்டம் ஆலய ஆலோசகர் வி.ரி. சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
 
இரங்கல்உரைகளை அம்பாறை மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன்  ஆலய பதில் தலைவருமான தவிசாளருமான கி.ஜெயசிறில் அறங்காவலர் ஒன்றிய செயலாளர் சி.நந்தேஸ்வரன் ஆலய செயலாளர் க.சண்முகம்  
உள்ளிட்ட சிலர் உரை யாற்றினர்.
 
 ஆலயமொன்றை அமைத்து கும்பாபிசேகம் காணவிருந்தவேளையில் காலமாகியுள்ளமை வேதனையளிப்பதாக பலரும் தெரிவித்தனர்.
 
அன்னாரர் பூதவுடல் நேற்று22)வெள்ளி காலை 12மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் தகனக்கிரியை இடம்பெற்றது.

Related posts