இடைக்கால கணக்கறிக்கைக்கு அங்கிகாரம்

2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவு செலவு கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்ட கணக்கறிக்கைக்கே, அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இந்த இடைக்கால கணக்கறிக்கையை, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் மார்ச் மாதம்  31 ஆம் திகதி வரை செயற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

Related posts