இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன் மக்கள் ஆர்ப்பாட்டம் ! போராட்டம் தொடரும் என அறிவிப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் இன்று(25) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்துடன் கூடிய ஒரு போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
 
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்பாக பொதுமக்கள் பதாதைகளை தாங்கிய வண்ணம்  அங்கு தங்களது உரிமைக்காக போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றார்கள் .
 
 உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த இந்த அலுவலகம் 1988களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது.
 
தொடர்ந்து 1993 இது அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருகின்றது. இருந்தபோதிலும் ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக பிரயோகித்து வருகின்றனர்.
 
 இதனை எதிர்த்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றார்கள்.
 
 
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கணடித்து நேற்று பிரதேச மக்கள் போராட்டத்தில் குதித்துளளனர்.
 
திட்டமிடப்பட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை எமது அமைதிப்போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்தனர்.
 
இறுதியாக 2019 இல் பாரிய உண்ணாவிரதப் போராட்டம் ஒருவார காலமாக வெற்றிகரமாக இடம் பெற்றமை தெரிந்ததே.

Related posts