இன்று காரைதீவில் காலடியில் மருத்துநீர்.

புதுவருடத்திற்கான மருத்துநீர்  இன்று-12-ஞாயிற்றுக்கிழமை பி.ப 3மணி தொடக்கம் 6மணிவரைக்கிடைப்பட்ட காலப்பகுதியில் காரைதீவிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படவுள்ளது.
 
அதற்காக தற்சமயம்  ஆறு ஆலயங்களில் மருத்துநீர் தயாரிக்கப்படுகின்றது.
 
அதனைப்பொதிசெய்து அதனுடன்  தலையில் வைப்பதற்கு இலவமிலையும் காலில் வைக்க விளாவிலையும் புத்தாண்டுசடங்குகள் தொடர்பான சிறுகுறிப்பு அடங்கிய பிரசுரமும் இன்று மேற்குறித்த காலத்தில்  சகலவீடுகளுக்கும் விநியோகிக்க பிரதேசசெயலகமும் பிரதேசசபையும்  துரித நடவடிக்கை எடுத்துள்ளது.
 
எனவே மக்கள்  அதற்காக வெளியேவரவேண்டிய அவசியமில்லை.
 
நாளை சகல ஆலயங்களும்  பூட்டப்பட்டிருக்கும். எனவே மக்கள் ஆலயங்களுக்கு செல்லவேண்டாம் எனக்கேட்கப்பட்டுள்ளனர்.
 
 

Related posts